வெடித்து சிதறுகிறது உறக்கம்
என்னை நீ தழுவாத போதும்
உன் நினைவுகள் என்னை தழுவுகின்றன..
பொறுமையாய் நான் இருந்தாலும்
கதறி அழுகின்றது இதயம்..!
உன் மௌனங்கள் என்ன?
உயர்ந்து வாழும் நிலவா?
மறந்து கூட இ(ர)றங்க மாட்டெங்குதே!
புலம்புகிறேன் நானும் - உனை
தொடத்தவிக்கும் குழந்தையாக..!
உயர்ந்து வாழும் நிலவா?
மறந்து கூட இ(ர)றங்க மாட்டெங்குதே!
புலம்புகிறேன் நானும் - உனை
தொடத்தவிக்கும் குழந்தையாக..!
பறிகொடுத்தேன் கற்றுக்கு
பருத்தியாகிய உன்னை..
பரிதவிக்கின்றேன் நானும்
அனாதையான இலங்கை அகதியாக..!
மறக்கத்தான் முயல்கின்றேன் உன்னை
அதனால் தானோ வெறுக்கின்றேன் என்னை?
மறவாத உன் நினைவால்
ஊசலாடும் என் உயிருக்காக
திறவாத பெண்னே உன் மனம்..?
அதனால் தானோ வெறுக்கின்றேன் என்னை?
மறவாத உன் நினைவால்
ஊசலாடும் என் உயிருக்காக
திறவாத பெண்னே உன் மனம்..?
BY : எழில் அரசன்.
ஜனா
ஜனா
No comments:
Post a Comment