Thursday, June 27, 2013
நிலாக் காதல் ..!
ஒளிந்து கொள்ள போகிறேன் நிரந்தரமாய்
அன்றாவது எம் காதலின் தூய்மையை
அறிந்து அவன் எனை தாய்மையுடன்
அணைத்து கொள்ளட்டும் ..!
Thursday, July 14, 2011
உன்னை சேரும் என் உள்ளம்..!
பார்த்ததே இல்லை...
இருந்தும் என் இரவுகளை
பகலாக்கி விட்டாய்...!
நடு இரவில் விவாதம் செய்தேன்
உன் உள்ளமே உறைவிடமாய்
அலைந்து நானும் ஆந்தையானேன்...!
நடமாடுகின்றேன் - எப்படியோ.!
என் மனம் செல்லும் வழியால்
நீயும் கூடவே வருகின்றாய்...!
இமைகளைக் கூட மூட மறுக்கின்றேன்
என் விழிகளில் வாழும்
உன் விம்பத்துக்கு வியர்க்கும் என்று...!
பெருமையாக சொல்லிக் கொள்ள
இனியும் எனக்கில்லை
பொறுமை...!
வாழும் என் நாட்களை
எழுப்பி ஓடவிடு - நான்
உன்னை அடையும் காலம்
உடனே வரட்டும்...!
கனவுப் புலம்பல்...!
இந்த அடை மழை வேளையிலும்
ஒரு துழி கூட நனையாமல் - என்
கனவில் வர எப்படி
உன்னால் மட்டும் முடிகிறது..!
எப்படியோ கண்டுபிடித்து வருகின்றாய்.
விடுமுறை நாளில் கூட விடாமல்
வந்து எனக்கு முத்தமிடுகிறாயே..!
நீ நிற்கும் போது- ஐயோ.!
உன் கால்களுக்கு வலிக்குமே என்று
கரம் பிடித்து என் அருகில் - உன்னை
நீயோ.! ஓடி மறைகின்றாய்..!
தொலை வானம் நீ...!
முகம்...
வளர் மதி உன்
நெற்றி...!
வின் மீன்கள் உன்
கண்கள்...
பொன் மீன்கள் உன்
மூக்கு...!
கூந்தல்...
வெண் மேகம் உன்
மனம்...!
நீல வானம் உன்
கண் மணிகள்...
செவ் வானமாய் உன்
செவ் இதல்கள் ...!
சிவந்து கிடக்கும் - உன்
முகப் பருக்கள்...!
நீண்டு வளைந்த
வானவில்லாய் - உன்
மெல்லிடைகள்...!
கரம் எட்டாத்தொலைவில்
அமர்ந்து கொண்டு - நான்
அடைய முடியாமல்
அலையும் - என்
தொலை வானம் நீ...!
Monday, January 24, 2011
அகதியான என் கதை..!
ஏற்பட்ட வெள்ளப் பெருக்கும் அது அளித்த அழிவின் அவலமும்....!
ஆனந்தம் பொங்கும் வேளை
பார் முழுதும் கார் மேகம்.
பார்த்திருக்கவே பறந்தது
அங்கும் இங்கும் ஓடிச்சென்ற
இஸ்டப்பட்டு வந்தடைந்தேன்
ஆறு அடி ஏழு அடி
ஆறு நாள் ஆர்ப்பாட்டம்
By: எழில் அரசன் ஜனா .
Tuesday, December 14, 2010
என் காதல் பரிதவிப்பு...!
என் மரண விழிம்புகள்
விண்னைத் தொட்டுச் சென்றேன் - பெண்னே.!
உன்னை கண்ணால் எட்டும் வரை...!
* * *
பார்க்கிறேன் கனவிலேயே உன்னை.
தனித்திருந்து தவிர்ப்பதற்காகவா.? - பிரம்மன்
தரணியிலே தவழ விட்டான் என்னை...!
பல தடவை எழுந்து நிற்கிறேன்
பள்ளத்தில் வீழ்த்திய - உன்
நினைவுகளில் இருந்து
உள்ளத்தால் தாழ்ந்து கொண்டிருக்கிறேன்
என்னையும் மீறிய உனதழகில்..!
மீளமுடியாமல் தான் கேட்கிறேன்
காதல் பிச்சை - நீயும்
இல்லை என்றே சொல்கிறாய்
என் காதலை
தொல்லை என்றே கொல்கிறாய்...!
உன்னைத் தான்டிப் போகாதோ?
என் இதயம் -ஏன்
முற்பிறப்பின் பளிவாங்கலைப் போல்
மாகராணியே அனுமதிக்கவில்லையே - அதுவும்
உன் ராட்சியத்தை ஆழ்வதற்காக அல்ல
Add caption |
என்னை கைதியாக்கியாவது
பெண்னே நீ என்னைச் சிறையெடு - உன்
இதயச்சிறையை விட
இருண்ட ஆயுள் சிறையிலேயே - வாழ்ந்து
உன் அருகிலேயே மாய்ந்து விடுவேன்...!
* * *
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
Saturday, May 15, 2010
சிரிக்கின்றது நம் நாடு..!
எண்ணி வைத்தும் பலனில்லை
தீயாக வந்த யுத்தம் - தன்
திசையை மறந்து பயனிக்க
நம் நாட்டு தமிழனை மட்டும்
வாழ்நாள் அகதியாக்கி விட்டு
நாடோடி நீ என்று
சிரிக்கின்றது நம் நாடு..!
சின்னஞ்சிறு வயதிலேயே
சிரிப்பைக் கூட அடகுவைத்த - எம்
பால் மணம் மாறா பிஞ்சுகளை
அம்மா! என்றழைக்க மறுத்து
அய்யோ! என்றழைக்க வைத்து
ஆயுதக் கல்வியை ஊட்டி
அரசியல் எதிரியாக்கி விட்டு
சிரிக்கின்றது நம் நாடு..!
கன்னிவெடி தந்த பரிசால்
காலிலோ பாதியில்லை
கைத்தடியின் உதவியால் - தினம்
கையேந்தும் காட்சியைய் கூட
களவாகப் படமெடுத்து - அயல் நாடுகளிடம்
கௌரவப் பிச்சை எடுத்து விட்டு
ஏமார்ந்து விட்ட எம்மைப் பார்த்து
நித்தம் எம் வாழ்வில்
முத்தமிடவே விழித்தெளும் விலைவாசி
பயங்கர வாதம் ஒழிக என்றால்
பாராளமன்றமே அதிருமே - கேவலம்
விலையேற்றத்திற்காவது
வில்லனாகாமல் - கைகொட்டி
சிரிக்கின்றது நம் நாடு..!
ஜனநாயக நாடாம் நம் நாடு
ஏதேதோ தேர்தல்களாம்
எல்லாமே பித்தலாட்டம் -நாம்
மண்ணுக்குள் போகும் வரை
ஆட வேண்டிய பொம்மலாட்டம் - இதை
சிந்திக்காத எம்மைப் பார்த்து
Saturday, April 10, 2010
அரபு நாட்டு தேவதை..
முகத்திரைக்குள் குடி கொன்டதோ?
செவ்விதழ் ரோஜாக்கள் - இம்
மங்கையின் மீது மோகம் கொண்டு
அவள் முகத்தை தழுவிக் கொன்டதோ..?
புண்ணகைக்க மாட்டாள் அந்த நிலா
உன் விழி பார்த்த மனிதன் - இனி
ஏழரை சனி பிடித்த பித்தன்தான்.
மௌனம் கலைந்த வார்த்தையின்
அதிர்வும் ஒன்றுதானே பெண்னே!
நீ ஒன்றும் அறபு நாட்டு அழகியல்ல
என் காதலர் தினம்..!
காதலர் திருவிழாவாம் - நானும்
காதலியாய் அழைத்திருந்தேன் உன்னையும்.
நீயும் வருவாய் என்ற நம்பிக்கையில்.....
எந் நொடியும் உன் நினைவில்
என்னையே மறந்து கடற்கரை மணலில்
காதலை சொல்ல பூவுடன் காத்திருக்கிறேன்....
நீ உன் காதலனுடன் வருகின்றாய்
என்று கூடத் தெரியாமல்..!
Wednesday, March 3, 2010
பயணங்களின் ஊர்வலம்...!
உண்மையை மீறி பொய்களும் பயணம்
ம(கி)ந்த சிந்தனை நாட்டில் பயணம்
மண்ணை மீட்க வன்னிப் பயணம்
மரண ஓலத்தில் அகதியின் பயணம்
அரிசியின் விலையில் அரசியல் பயணம்
அரசியல் வாதியின் கட்சிப் பயணம்...
நகரங்கள் தோறும் நரகமாய் பயணம்
நச்சுப் பாம்புகள் கிழக்கில் பயணம்
தமிழினத் தலைவனே எமனாய் பயணம்
தரங்கெட்ட அமைப்புகள் பயணம்
வாய் திறந்தால் வண்முறைப் பயணம்
ஊமை என்றாலும் அடிமைப் பயணம்...
தேர்தல் கால நடிப்புகள் பயணம்
தேசம் என்றால் பிடிப்புகள் பயணம்
மரணம் என்றதும் கண்ணீர் பயணம்
மறுநாளே இறந்தவர் பயணம்
டீனேஜ் என்றால் குறும்புகள் பயணம்
தீ என்றியே புகையும் பயணம்
பெண்களுக்கென்றே கண்களும் பயணம்
பெற்றோர் கதறும் காதலும் பயணம்...
நடிகைகளை வெறுத்த அடைகளும் பயணம்
சினிமா என்பதே வீண் பயணம்
சிந்திக்காத ரசிகனும் பயணம்
மீண்டும் மீண்டும் தவறுகள் பயணம்
மீள முடியா கொடுமைகளும் பயணம்
இலட்ச்சியம் இல்லாதது உன் பயணம்
அதை அலட்சியம் செய்வதே நம் பயணம்
இதை சொல்லியே களியும் என் பயணம்...!
Friday, February 5, 2010
!....................பிச்சைக்காரன்....................!
Wednesday, February 3, 2010
பழிவாங்கும் தனிமை..!
தனிமை என்னும் வியாதி
தாவிக்கொன்டதோ? என் மனதில்..
தாயை பறிகொடுத்த சேயாக
தனிமையடைந்த என் மனம்
பரிதவிக்கும் பரிதாபம் தான் எனோ?
காக்கை போன்றே புலம்பிக்
கரைகின்றேன் - என்னோடு
கூடி அளத்தான் யாருமில்லை..!
உன் தோள் சாய்ந்ததால்
என் தலை கொய்யப்படுகின்றதே...
நீ ஊட்டிய அமுதம் கூட - இன்று
தீ உண்ட அமுதாய் எரிகின்றதே..!
என் விழிகள் இன்று குறுடானதேனோ?
உன் குறும் செய்தியையே உண்னும்
என் தொலைபேசி இன்று பட்டினி கிடப்பதேனோ?
என் நோட்டில் நீ எழுதிய
உன் எழுத்துக்கள் - என்
கண் முன்னே எரிவதேனோ?
கற்று வந்து கடத்திச்செல்வதேனோ?
என் கோபம் தொட்டதால்தான் - என்னை
உன் சாபம் கொல்கின்றதோ?
கோடை கண்ட மகிழ்ச்சியில்
வற்றிப்போன என் கண்ணீர் - இன்று
மாரி பெய்யும் மழையாக
தறிகெட்டுப் பொலிவதேனோ?
ஓசையுடன் அடங்கட்டும் - கொடும்
பாவச் சிலுவையால்
படைக்கப்பட்ட என் உயிர்..!
Tuesday, February 2, 2010
கொல்லும் நினைவுகள்....
வெடித்து சிதறுகிறது உறக்கம்
என்னை நீ தழுவாத போதும்
உன் நினைவுகள் என்னை தழுவுகின்றன..
பொறுமையாய் நான் இருந்தாலும்
கதறி அழுகின்றது இதயம்..!
உயர்ந்து வாழும் நிலவா?
மறந்து கூட இ(ர)றங்க மாட்டெங்குதே!
புலம்புகிறேன் நானும் - உனை
தொடத்தவிக்கும் குழந்தையாக..!
பறிகொடுத்தேன் கற்றுக்கு
பருத்தியாகிய உன்னை..
பரிதவிக்கின்றேன் நானும்
அனாதையான இலங்கை அகதியாக..!
அதனால் தானோ வெறுக்கின்றேன் என்னை?
மறவாத உன் நினைவால்
ஊசலாடும் என் உயிருக்காக
திறவாத பெண்னே உன் மனம்..?
ஜனா
Saturday, January 30, 2010
உன்னோடு நான் கொண்ட காதல்
அன்பே!
புத்தர் உலகில் தோன்றி
புது மார்க்கத்தைத் தான் உருவாக்கினார்..
நீ என் உள்ளத்தில் தோன்றி
புது உலகத்தையே காட்டி விட்டாய்...!
தனித்திருந்த என் இதயத்தில்
கொத்திக் கொத்தி கூடு கட்டி
குடிபுகுந்து வாழ வந்த
மரங்கொத்திப் பறவை நீயே தான்..!
உன்னை முதன் முதலில் பார்த்த போதே
என்னை நானே மறந்து விட்டென்..
அதனால் தான் என் காதலைக்கூட
உன்னிடம் கூற மறந்து விட்டேன்..!
நீ சென்ற பாதைகளே
நின் காதல் ரயில் செல்லும்
பாதைகளாக மாற்றிவிட்டாய்- பெண்ணே
மாறிவிட்டேன் உன் பாதச்சுவடுகள் தேடும் நீளலாக..!
உயிரே!
உன் முகத்தில் வந்து விழும் கூந்தல் கூட
அழகுதானடி நீ அதனை ஒதுக்கி விடும் போது
ஐயோ! எனக்காக தூதுவரும் காதல் பறவையைய்
ஒதுக்காதே! எனக் கூற வருவேன் - இருந்தும்
நீ ஒதுக்கிவிடும் அழகில் மெய் மறந்து நானும் சிலையாக நின்று விடுவேன்
தூக்கம் கூட என்னை விட்டுத் தூரம்
சென்றுவிட்டதால்
விழித்திருந்தே கண்கின்றேன்.- உன்
விம்பத்தை தினம் கனவிலேயே..
BY-எழில் அரசன் - ஜனா