Thursday, June 27, 2013

கண்ணீரின் மரணம் .!

என்னை விட்டு நீ விலகிப் போகும் போதெல்லாம்
உன்னை சமாதானம் செய்ய என் மனம் முற்படும்
அதற்கு முன் முந்தி சென்று மண்ணில் வீழ்ந்து
என்னக்காகவே மரணித்து போகின்றன என் கண்ணீர்...!






 
 
 
 
 
 
 
 
 
 
BY : எழில் அரசன்
ஜனா
                                                                  

நிலாக் காதல் ..!













நிலவே இப்பொழுது தான் புரிகிறது ஏன்
நீ அமாவாசையில் மறைகின்றாய்  என்று
உன் அன்பை தொலைத்து கதறியவன் - தன்
உயிரை கண்டதாய் அணைத்து முத்தமிடும்
அந்த நொடிக்காக தானே ..!
                      ஓர் நாள் என் காதலனுக்காக  நானும்
                      ஒளிந்து கொள்ள போகிறேன் நிரந்தரமாய்
                      அன்றாவது எம் காதலின் தூய்மையை
                      அறிந்து அவன் எனை தாய்மையுடன்
                      அணைத்து கொள்ளட்டும் ..!

BY : எழில் அரசன்.
                                                                             -ஜனா-

Thursday, July 14, 2011

உன்னை சேரும் என் உள்ளம்..!

இதுவரை உன்னை நான்
பார்த்ததே இல்லை...
இருந்தும் என் இரவுகளை
பகலாக்கி விட்டாய்...!

பகல் முழுவதும் ஊமையானேன்
நடு இரவில் விவாதம் செய்தேன்
உன் உள்ளமே உறைவிடமாய்
அலைந்து நானும் ஆந்தையானேன்...!


நான் தனியாகத்தான்
நடமாடுகின்றேன் - எப்படியோ.!
என் மனம் செல்லும் வழியால்
நீயும் கூடவே வருகின்றாய்...!

இப்போழுதெல்லாம் என்
இமைகளைக் கூட மூட மறுக்கின்றேன்
என் விழிகளில் வாழும்
உன் விம்பத்துக்கு வியர்க்கும் என்று...!

காத்திருப்பதில் சுகம்தான் என்று
பெருமையாக சொல்லிக் கொள்ள
இனியும் எனக்கில்லை
பொறுமை...!

உன்னால் உறக்கத்தில்
வாழும் என் நாட்களை
எழுப்பி ஓடவிடு - நான்
உன்னை அடையும் காலம்
உடனே வரட்டும்...!

BY :-எழில் அரசன்.
                ஜனா....!

கனவுப் புலம்பல்...!

அன்பே..!
இந்த அடை மழை வேளையிலும்
ஒரு துழி கூட நனையாமல் - என்
கனவில் வர எப்படி
உன்னால் மட்டும் முடிகிறது..!

நான் எந்த ஊருக்குச் சென்றாலும்
எப்படியோ கண்டுபிடித்து வருகின்றாய்.
விடுமுறை நாளில் கூட விடாமல்
வந்து எனக்கு முத்தமிடுகிறாயே..!

என் உயிரே நீ தானே
நீ நிற்கும் போது- ஐயோ.!
உன் கால்களுக்கு வலிக்குமே என்று
கரம் பிடித்து என் அருகில் - உன்னை
அமர வைக்க எழும்புகிறேன்
நீயோ.! ஓடி மறைகின்றாய்..!

இது என்ன புது விளையாட்டு..?
ஓ..! இதுதான் காதல்
கண்ணம்பூச்சியா..? 
BY :-எழில் அரசன்.
                ஜனா....!

தொலை வானம் நீ...!

முழு மதி உன்
முகம்...
வளர் மதி உன்
நெற்றி...!

வின் மீன்கள் உன்
கண்கள்...
பொன் மீன்கள் உன்
மூக்கு...!

கார் மேகம் உன்
கூந்தல்...
வெண் மேகம் உன்
மனம்...!

நீல வானம் உன்
கண் மணிகள்...
செவ் வானமாய் உன்
செவ் இதல்கள் ...!

செவ்வாய் கிரகமோ..?
சிவந்து கிடக்கும் - உன்
முகப் பருக்கள்...!

நீண்டு வளைந்த
வானவில்லாய் - உன்
மெல்லிடைகள்...!

மொத்தத்தில்...!
கரம் எட்டாத்தொலைவில்
அமர்ந்து கொண்டு - நான்
அடைய முடியாமல்
அலையும் - என்
தொலை வானம் நீ...!
 
BY : எழில் அரசன்.
ஜனா

Monday, January 24, 2011

அகதியான என் கதை..!

 (2011ஆம் ஆண்டு அழைத்து வந்த பேரும் மழைவீழ்ச்சியினால் 
ஏற்பட்ட வெள்ளப் பெருக்கும் அது அளித்த அழிவின் அவலமும்....!


ஆனந்தம் பொங்கும் வேளை
வருடப்பிறப்பு விருந்தினராய்
புதுமணை விட்டு வெளியேறும்
புதுமணப் பெண்போல் - அந்த
ஆழ் கடலே பெருக்கெடுத்ததாய்
ஆறுகள் எல்லாம் செருக்கெடுத்து
என் மணை தேடி வந்து என்னையே
ஏந்தும் கொலம்தான் என்னவோ....?





மீண்டும் ஒரு சுணாமியோ?
மீழ முடியாதோ? தலை குடைந்தேன்-நான்
வெள்ளம் தலைக்கு மேலே
போவதால் நிலை குலைந்தேன் - இனி
சான் என்ன? முழம் என்ன?
உயிர் என்ன்? உடமை என்ன?
இதயம் பொறுக்காமல் நானும்
இல்லத்துக்கு விடை கொடுத்தேன்....!






பார் முழுதும் கார் மேகம்.
அங்கும் இங்கும் ஓடி
கதறி அழுது கண்ணீர் விட ..
யார் அடித்து கொடுமை செய்ததோ?
மேகம் விட்ட கண்ணீர் கண்டு
மோகம் கொண்ட காற்றும்
இதயம் நொந்து அனுதாபத்தில்
ஆடியது புயல் நடனம்.......!







பார்த்திருக்கவே பறந்தது
பட்டம் பூச்சியாய் கூரைகள்..
தைரியமாய் நின்ற மரமும்
தறிகெட்டு தடுமாறி விழுந்தது..
பலர் பதுக்கி வைத்த பொக்கிஷங்களும்
பாரபட்சம் இன்றி வெளிவர..
அதையும் உண்ணவே ஓடிவந்தன
ஆக்ரோசமாய் சுழிகள்....!







அங்கும் இங்கும் ஓடிச்சென்ற
அயலவர்களை காப்பேனா?
அமைதியாய் வாழவைத்த - என்
அரன்மணையைய்த் தான் பார்பேனா?
உயிர் காத்து நான் ஒடியதால்
உடமைகளும் வீடுகளும் என்னை
தலைமூழ்கிக் கொண்டே
வந்தன வரிசையாக என் பின்னால்...!








ஆலயம் தேடி தஞ்சமடைய
அவலம்! அங்கும் துவசம் செய்தது
கடவுள்களை காவிய நீருடன்
நானும் அப்பாவியாய் சென்றேன்
அலை சுமர்ந்த பல்லாக்கிலே....
எப்படியோ!கடவுள்களை விட்டு
கரை தப்பி உயிர் பிளைத்தேன்
கடவுளே! நன்றி...!.









இஸ்டப்பட்டு வந்தடைந்தேன்
இந்துக்கல்லூரி முகாமுக்குள்
மழைக்கு கூட கல்லூரி வாயிலை
மிதியாதவன் என்ற வழக்கையும்
விதியின் சதியால் வென்று விட்டேன்
எனக்கு மட்டும்தானோ? வெள்ளம்
என்று எண்னி நிமிர்ந்தேன் - என்
தேசமே இங்குதான் அகதியானது....!








ஆறு அடி ஏழு அடி
ஆழம் என்று மூழ்கியோர்
அழந்ததை கூற...
அவனைக் காணவில்லையே! - என
அவளும் வாய் கிழித்து கதறினாள்...
அப்படி இப்படி என்று
அழிவடைந்த உடமைகளும்
அதிகரித்தது செத விபரத்தை....!










ஆறு நாள் ஆர்ப்பாட்டம்
அழிந்தது முழு நாடும்
அங்கும் இங்கும் ஓடி ஓடி
ஒளிந்து கொண்டது வெள்ள நீரும்
ஆமை வேகத்தில் பாடி பாடி
வந்தன அனுதாபங்களும்....
அணர்த்த நிவாரணம் தேடி தேடியே
அலைக்களிந்தது சொம்பேறி
அகதியான எனது வாழ்வும்..!
      
                                                                                         By: எழில் அரசன் ஜனா .

Tuesday, December 14, 2010

என் காதல் பரிதவிப்பு...!

உன் மௌனங்கள் தான்
என் மரண விழிம்புகள்
விண்னைத் தொட்டுச் சென்றேன் - பெண்னே.!
உன்னை கண்ணால் எட்டும் வரை...!
                         * * *

பல தடவை விழித்திருந்து
பார்க்கிறேன் கனவிலேயே உன்னை.
தனித்திருந்து தவிர்ப்பதற்காகவா.? - பிரம்மன்
தரணியிலே தவழ விட்டான் என்னை...!
                         * * *

பல தடவை எழுந்து நிற்கிறேன்
பள்ளத்தில் வீழ்த்திய - உன்
நினைவுகளில் இருந்து
உள்ளத்தால் தாழ்ந்து கொண்டிருக்கிறேன்
என்னையும் மீறிய உனதழகில்..!
                          * * *

மீண்டும் மீண்டும் உன்னிடமிருந்து
மீளமுடியாமல் தான் கேட்கிறேன்
காதல் பிச்சை - நீயும்
இல்லை என்றே சொல்கிறாய்
என் காதலை
தொல்லை என்றே கொல்கிறாய்...!
                          * * *


நான் விண்னைத் தான்டிப் போகாமல்
உன்னைத் தான்டிப் போகாதோ?
என் இதயம் -ஏன்
முற்பிறப்பின் பளிவாங்கலைப் போல் 
தொடர்கின்றாய்...?
                         * * *

மன்னனாக முடிசூடத்தான்
மாகராணியே அனுமதிக்கவில்லையே - அதுவும்
உன் ராட்சியத்தை ஆழ்வதற்காக அல்ல
Add caption
உயிரே! உன்னோடு வாழ்வதற்காகத்தான்...!
                          * * *


என்னை கைதியாக்கியாவது
பெண்னே நீ என்னைச் சிறையெடு - உன்
இதயச்சிறையை விட
இருண்ட ஆயுள் சிறையிலேயே - வாழ்ந்து
உன் அருகிலேயே மாய்ந்து விடுவேன்...!
                           * * *

BY : எழில் அரசன்.
                                               -ஜனா-


                                                   
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *  * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

Saturday, May 15, 2010

சிரிக்கின்றது நம் நாடு..!


ஏதேதோ கனவுகள் கண்டு
எண்ணி வைத்தும் பலனில்லை
தீயாக வந்த யுத்தம் - தன்
திசையை மறந்து பயனிக்க
நம் நாட்டு தமிழனை மட்டும்
வாழ்நாள் அகதியாக்கி விட்டு
நாடோடி நீ என்று
சிரிக்கின்றது நம் நாடு..!



சின்னஞ்சிறு வயதிலேயே
சிரிப்பைக் கூட அடகுவைத்த - எம்
பால் மணம் மாறா பிஞ்சுகளை
அம்மா! என்றழைக்க மறுத்து
அய்யோ! என்றழைக்க வைத்து
ஆயுதக் கல்வியை ஊட்டி
அரசியல் எதிரியாக்கி விட்டு
சிரிக்கின்றது நம் நாடு..!



கன்னிவெடி தந்த பரிசால்
காலிலோ பாதியில்லை
கைத்தடியின் உதவியால் - தினம்
கையேந்தும் காட்சியைய் கூட
களவாகப் படமெடுத்து - அயல் நாடுகளிடம்
கௌரவப் பிச்சை எடுத்து விட்டு
ஏமார்ந்து விட்ட எம்மைப் பார்த்து
சிரிக்கின்றது நம் நாடு...!



என்ன இது புது ஓசை?
எம் நாட்டு தேசிய கீதம் - அது
வரிகள் இன்றிய இசையனாலும் தமிழனின்
வலிகள் நிறைந்த இசை -இதுவே
அயல் நாடுகள் நம் நிலை கண்டு
பரிதாபத்துடன் பரிசளித்த மல்டிபறள்
அவ் இசையை இசைக்க விட்டு
சிரிக்கின்றது நம் நாடு..!






யுத்தம் முழங்கும் காலமிது
நித்தம் எம் வாழ்வில்
முத்தமிடவே விழித்தெளும் விலைவாசி
பயங்கர வாதம் ஒழிக என்றால்
பாராளமன்றமே அதிருமே - கேவலம்
விலையேற்றத்திற்காவது
வில்லனாகாமல் - கைகொட்டி
சிரிக்கின்றது நம் நாடு..!







கொடிய கிட்லரே நடுங்கும்
ஜனநாயக நாடாம் நம் நாடு
ஏதேதோ தேர்தல்களாம்
எல்லாமே பித்தலாட்டம் -நாம்
மண்ணுக்குள் போகும் வரை
ஆட வேண்டிய பொம்மலாட்டம் - இதை
சிந்திக்காத எம்மைப் பார்த்து 
சிரிக்கின்றது நம் நாடு..!

Saturday, April 10, 2010

அரபு நாட்டு தேவதை..

சிப்பியின் முத்தொன்று  இடம் மாறி
முகத்திரைக்குள் குடி கொன்டதோ?
செவ்விதழ் ரோஜாக்கள் - இம்
மங்கையின் மீது மோகம் கொண்டு
அவள் முகத்தை தழுவிக் கொன்டதோ..?

புண்ணகைத்த உன் திருமுகம் பார்த்தால் - இனி
புண்ணகைக்க மாட்டாள் அந்த நிலா
உன் விழி பார்த்த மனிதன் - இனி
ஏழரை சனி பிடித்த பித்தன்தான்.

பூ மலரும் ஓசையும் உன்
மௌனம் கலைந்த வார்த்தையின்
அதிர்வும் ஒன்றுதானே பெண்னே!
 நீ ஒன்றும் அறபு நாட்டு அழகியல்ல 
அகில லோக அழகி என்பதால்...!

உயிர் கொடுத்த அன்னையே...!

அன்னையே!
அன்பான உன் உள்ளம்...
பாசமான உன் பேச்சு.......
இதமான உன் அரவணைப்பு...
சுகமான உன் தாலாட்டு - என......
அனைத்தையும் தொலைத்துவிட்டு
பித்தனாய் அலைகின்றேன் - என்
உறக்கத்தைக் காவல் வைத்து...!

BY :                       
எழில்அரசன்.                                                         
                                                                                                -ஜனா-

என் காதலர் தினம்..!

உலக காதலர்களுக்கு இன்று
காதலர் திருவிழாவாம் - நானும்
காதலியாய் அழைத்திருந்தேன் உன்னையும்.
நீயும் வருவாய் என்ற நம்பிக்கையில்.....

எந் நொடியும் உன் நினைவில்
என்னையே மறந்து கடற்கரை மணலில்
காதலை சொல்ல பூவுடன் காத்திருக்கிறேன்....
          நீ உன் காதலனுடன் வருகின்றாய்
          என்று கூடத் தெரியாமல்..!

BY : எழில் அரசன்.
ஜனா

Wednesday, March 3, 2010

பயணங்களின் ஊர்வலம்...!

உலகை சுற்றி சூரியன் பயணம்
உண்மையை மீறி பொய்களும் பயணம்
(கி)ந்த சிந்தனை நாட்டில் பயணம்
மண்ணை மீட்க வன்னிப் பயணம்
மரண ஓலத்தில் அகதியின் பயணம்
அரிசியின் விலையில் அரசியல் பயணம்
அரசியல் வாதியின் கட்சிப் பயணம்...

குடித்தனம் நோக்கிய செலவின் பயணம்
குடித்தவன் உடலில் போதையும் பயணம்
நகரங்கள் தோறும் நரகமாய் பயணம்
நச்சுப் பாம்புகள் கிழக்கில் பயணம்
தமிழினத் தலைவனே எமனாய் பயணம்
தரங்கெட்ட அமைப்புகள் பயணம்
வாய் திறந்தால் வண்முறைப் பயணம்
ஊமை என்றாலும் அடிமைப் பயணம்...

தேர்தல் கால நடிப்புகள் பயணம்
தேசம் என்றால் பிடிப்புகள் பயணம்
மரணம் என்றதும் கண்ணீர் பயணம்
மறுநாளே இறந்தவர் பயணம்
டீனேஜ் என்றால் குறும்புகள் பயணம்
தீ என்றியே புகையும் பயணம்
பெண்களுக்கென்றே கண்களும் பயணம்
பெற்றோர் கதறும் காதலும் பயணம்...

கோடம்பாக்கத்தில் ஹொலிவூட் பயணம்
நடிகைகளை வெறுத்த அடைகளும் பயணம்
சினிமா என்பதே வீண் பயணம்
சிந்திக்காத ரசிகனும் பயணம்
மீண்டும் மீண்டும் தவறுகள் பயணம்
மீள முடியா கொடுமைகளும் பயணம்
இலட்ச்சியம் இல்லாதது உன் பயணம்
அதை அலட்சியம் செய்வதே நம் பயணம்
இதை சொல்லியே களியும் என் பயணம்...!

Friday, February 5, 2010

!....................பிச்சைக்காரன்....................!


உயிரே!
போதை தரும் உன்
பார்வைகள்....!
மயங்க வைக்கும் உன்
பேச்சு....!
திணறடிக்கும் உன்
புண்ணகை....!
தாகமெடுக்கும் உன்
இதல்கள்....!
உயிரூட்டும் உன்
பாசம்....! - என
உருவான உன்னையே
கேட்டுத் தினம் கையேந்தும்
பிச்சைக்காறன் தான் நான்....!
-எழில் அரசன்-

Wednesday, February 3, 2010

பழிவாங்கும் தனிமை..!


தனிமை என்னும் வியாதி
தாவிக்கொன்டதோ? என் மனதில்..
தாயை பறிகொடுத்த சேயாக
தனிமையடைந்த என் மனம்
பரிதவிக்கும் பரிதாபம் தான் எனோ?

காரணம் தெரியாது ஊமையானேன்
காக்கை போன்றே புலம்பிக்
கரைகின்றேன் - என்னோடு
கூடி அளத்தான் யாருமில்லை..!

உன் தோள் சாய்ந்ததால்
என் தலை கொய்யப்படுகின்றதே...
நீ ஊட்டிய அமுதம் கூட - இன்று
தீ உண்ட அமுதாய் எரிகின்றதே..!

உன் விழியே பார்த்த
என் விழிகள் இன்று குறுடானதேனோ?
உன் குறும் செய்தியையே உண்னும்
என் தொலைபேசி இன்று பட்டினி கிடப்பதேனோ?

என் நோட்டில் நீ எழுதிய
உன் எழுத்துக்கள் - என்
கண் முன்னே எரிவதேனோ?

நீ கற்றுத்தந்த கல்வியெல்லாம்
கற்று வந்து கடத்திச்செல்வதேனோ?
என் கோபம் தொட்டதால்தான் - என்னை
உன் சாபம் கொல்கின்றதோ?

கோடை கண்ட மகிழ்ச்சியில்
வற்றிப்போன என் கண்ணீர் - இன்று
மாரி பெய்யும் மழையாக
தறிகெட்டுப் பொலிவதேனோ?

வென்றே அழுதுவிடு மனமே
ஓசையுடன் அடங்கட்டும் - கொடும்
பாவச் சிலுவையால்
படைக்கப்பட்ட என் உயிர்..!
By: எழில் அரசன் ஜனா .

Tuesday, February 2, 2010

கொல்லும் நினைவுகள்....


வெடித்து சிதறுகிறது உறக்கம்
என்னை நீ தழுவாத போதும்
உன் நினைவுகள் என்னை தழுவுகின்றன..
பொறுமையாய் நான் இருந்தாலும்
கதறி அழுகின்றது இதயம்..!

உன் மௌனங்கள் என்ன?
உயர்ந்து வாழும் நிலவா?
மறந்து கூட ()றங்க மாட்டெங்குதே!
புலம்புகிறேன் நானும் - உனை
தொடத்தவிக்கும் குழந்தையாக..!

பறிகொடுத்தேன் கற்றுக்கு
பருத்தியாகிய உன்னை..
பரிதவிக்கின்றேன் நானும்
அனாதையான இலங்கை அகதியாக..!

மறக்கத்தான் முயல்கின்றேன் உன்னை
அதனால் தானோ வெறுக்கின்றேன் என்னை?
மறவாத உன் நினைவால்
ஊசலாடும் என் உயிருக்காக
திறவாத பெண்னே உன் மனம்..?

BY : எழில் அரசன்.
ஜனா

Saturday, January 30, 2010

உன்னோடு நான் கொண்ட காதல்

அன்பே!
புத்தர் உலகில் தோன்றி
புது மார்க்கத்தைத் தான் உருவாக்கினார்..
நீ என் உள்ளத்தில் தோன்றி
புது உலகத்தையே காட்டி விட்டாய்...!

தனித்திருந்த என் இதயத்தில்
கொத்திக் கொத்தி கூடு கட்டி
குடிபுகுந்து வாழ வந்த
மரங்கொத்திப் பறவை நீயே தான்..!


உன்னை முதன் முதலில் பார்த்த போதே
என்னை நானே மறந்து விட்டென்..
அதனால் தான் என் காதலைக்கூட
உன்னிடம் கூற மறந்து விட்டேன்..!


நீ சென்ற பாதைகளே
நின் காதல் ரயில் செல்லும்
பாதைகளாக மாற்றிவிட்டாய்- பெண்ணே
மாறிவிட்டேன் உன் பாதச்சுவடுகள் தேடும் நீளலாக..!


உயிரே!
உன் முகத்தில் வந்து விழும் கூந்தல் கூட
அழகுதானடி நீ அதனை ஒதுக்கி விடும் போது
ஐயோ! எனக்காக தூதுவரும் காதல் பறவையைய்
ஒதுக்காதே! எனக் கூற வருவேன் - இருந்தும்
நீ ஒதுக்கிவிடும் அழகில் மெய் மறந்து நானும் சிலையாக நின்று விடுவேன்


தூக்கம் கூட என்னை விட்டுத் தூரம்
சென்றுவிட்டதால்
விழித்திருந்தே கண்கின்றேன்.- உன்
விம்பத்தை தினம் கனவிலேயே..

BY-எழில் அரசன் - ஜனா