Thursday, July 14, 2011

உன்னை சேரும் என் உள்ளம்..!

இதுவரை உன்னை நான்
பார்த்ததே இல்லை...
இருந்தும் என் இரவுகளை
பகலாக்கி விட்டாய்...!

பகல் முழுவதும் ஊமையானேன்
நடு இரவில் விவாதம் செய்தேன்
உன் உள்ளமே உறைவிடமாய்
அலைந்து நானும் ஆந்தையானேன்...!


நான் தனியாகத்தான்
நடமாடுகின்றேன் - எப்படியோ.!
என் மனம் செல்லும் வழியால்
நீயும் கூடவே வருகின்றாய்...!

இப்போழுதெல்லாம் என்
இமைகளைக் கூட மூட மறுக்கின்றேன்
என் விழிகளில் வாழும்
உன் விம்பத்துக்கு வியர்க்கும் என்று...!

காத்திருப்பதில் சுகம்தான் என்று
பெருமையாக சொல்லிக் கொள்ள
இனியும் எனக்கில்லை
பொறுமை...!

உன்னால் உறக்கத்தில்
வாழும் என் நாட்களை
எழுப்பி ஓடவிடு - நான்
உன்னை அடையும் காலம்
உடனே வரட்டும்...!

BY :-எழில் அரசன்.
                ஜனா....!

No comments:

Post a Comment