Thursday, July 14, 2011

தொலை வானம் நீ...!

முழு மதி உன்
முகம்...
வளர் மதி உன்
நெற்றி...!

வின் மீன்கள் உன்
கண்கள்...
பொன் மீன்கள் உன்
மூக்கு...!

கார் மேகம் உன்
கூந்தல்...
வெண் மேகம் உன்
மனம்...!

நீல வானம் உன்
கண் மணிகள்...
செவ் வானமாய் உன்
செவ் இதல்கள் ...!

செவ்வாய் கிரகமோ..?
சிவந்து கிடக்கும் - உன்
முகப் பருக்கள்...!

நீண்டு வளைந்த
வானவில்லாய் - உன்
மெல்லிடைகள்...!

மொத்தத்தில்...!
கரம் எட்டாத்தொலைவில்
அமர்ந்து கொண்டு - நான்
அடைய முடியாமல்
அலையும் - என்
தொலை வானம் நீ...!
 
BY : எழில் அரசன்.
ஜனா

No comments:

Post a Comment