Thursday, July 14, 2011

கனவுப் புலம்பல்...!

அன்பே..!
இந்த அடை மழை வேளையிலும்
ஒரு துழி கூட நனையாமல் - என்
கனவில் வர எப்படி
உன்னால் மட்டும் முடிகிறது..!

நான் எந்த ஊருக்குச் சென்றாலும்
எப்படியோ கண்டுபிடித்து வருகின்றாய்.
விடுமுறை நாளில் கூட விடாமல்
வந்து எனக்கு முத்தமிடுகிறாயே..!

என் உயிரே நீ தானே
நீ நிற்கும் போது- ஐயோ.!
உன் கால்களுக்கு வலிக்குமே என்று
கரம் பிடித்து என் அருகில் - உன்னை
அமர வைக்க எழும்புகிறேன்
நீயோ.! ஓடி மறைகின்றாய்..!

இது என்ன புது விளையாட்டு..?
ஓ..! இதுதான் காதல்
கண்ணம்பூச்சியா..? 
BY :-எழில் அரசன்.
                ஜனா....!

No comments:

Post a Comment