Thursday, July 14, 2011

உன்னை சேரும் என் உள்ளம்..!

இதுவரை உன்னை நான்
பார்த்ததே இல்லை...
இருந்தும் என் இரவுகளை
பகலாக்கி விட்டாய்...!

பகல் முழுவதும் ஊமையானேன்
நடு இரவில் விவாதம் செய்தேன்
உன் உள்ளமே உறைவிடமாய்
அலைந்து நானும் ஆந்தையானேன்...!


நான் தனியாகத்தான்
நடமாடுகின்றேன் - எப்படியோ.!
என் மனம் செல்லும் வழியால்
நீயும் கூடவே வருகின்றாய்...!

இப்போழுதெல்லாம் என்
இமைகளைக் கூட மூட மறுக்கின்றேன்
என் விழிகளில் வாழும்
உன் விம்பத்துக்கு வியர்க்கும் என்று...!

காத்திருப்பதில் சுகம்தான் என்று
பெருமையாக சொல்லிக் கொள்ள
இனியும் எனக்கில்லை
பொறுமை...!

உன்னால் உறக்கத்தில்
வாழும் என் நாட்களை
எழுப்பி ஓடவிடு - நான்
உன்னை அடையும் காலம்
உடனே வரட்டும்...!

BY :-எழில் அரசன்.
                ஜனா....!

கனவுப் புலம்பல்...!

அன்பே..!
இந்த அடை மழை வேளையிலும்
ஒரு துழி கூட நனையாமல் - என்
கனவில் வர எப்படி
உன்னால் மட்டும் முடிகிறது..!

நான் எந்த ஊருக்குச் சென்றாலும்
எப்படியோ கண்டுபிடித்து வருகின்றாய்.
விடுமுறை நாளில் கூட விடாமல்
வந்து எனக்கு முத்தமிடுகிறாயே..!

என் உயிரே நீ தானே
நீ நிற்கும் போது- ஐயோ.!
உன் கால்களுக்கு வலிக்குமே என்று
கரம் பிடித்து என் அருகில் - உன்னை
அமர வைக்க எழும்புகிறேன்
நீயோ.! ஓடி மறைகின்றாய்..!

இது என்ன புது விளையாட்டு..?
ஓ..! இதுதான் காதல்
கண்ணம்பூச்சியா..? 
BY :-எழில் அரசன்.
                ஜனா....!

தொலை வானம் நீ...!

முழு மதி உன்
முகம்...
வளர் மதி உன்
நெற்றி...!

வின் மீன்கள் உன்
கண்கள்...
பொன் மீன்கள் உன்
மூக்கு...!

கார் மேகம் உன்
கூந்தல்...
வெண் மேகம் உன்
மனம்...!

நீல வானம் உன்
கண் மணிகள்...
செவ் வானமாய் உன்
செவ் இதல்கள் ...!

செவ்வாய் கிரகமோ..?
சிவந்து கிடக்கும் - உன்
முகப் பருக்கள்...!

நீண்டு வளைந்த
வானவில்லாய் - உன்
மெல்லிடைகள்...!

மொத்தத்தில்...!
கரம் எட்டாத்தொலைவில்
அமர்ந்து கொண்டு - நான்
அடைய முடியாமல்
அலையும் - என்
தொலை வானம் நீ...!
 
BY : எழில் அரசன்.
ஜனா