Thursday, June 27, 2013

கண்ணீரின் மரணம் .!

என்னை விட்டு நீ விலகிப் போகும் போதெல்லாம்
உன்னை சமாதானம் செய்ய என் மனம் முற்படும்
அதற்கு முன் முந்தி சென்று மண்ணில் வீழ்ந்து
என்னக்காகவே மரணித்து போகின்றன என் கண்ணீர்...!






 
 
 
 
 
 
 
 
 
 
BY : எழில் அரசன்
ஜனா
                                                                  

நிலாக் காதல் ..!













நிலவே இப்பொழுது தான் புரிகிறது ஏன்
நீ அமாவாசையில் மறைகின்றாய்  என்று
உன் அன்பை தொலைத்து கதறியவன் - தன்
உயிரை கண்டதாய் அணைத்து முத்தமிடும்
அந்த நொடிக்காக தானே ..!
                      ஓர் நாள் என் காதலனுக்காக  நானும்
                      ஒளிந்து கொள்ள போகிறேன் நிரந்தரமாய்
                      அன்றாவது எம் காதலின் தூய்மையை
                      அறிந்து அவன் எனை தாய்மையுடன்
                      அணைத்து கொள்ளட்டும் ..!

BY : எழில் அரசன்.
                                                                             -ஜனா-