Wednesday, February 3, 2010

பழிவாங்கும் தனிமை..!


தனிமை என்னும் வியாதி
தாவிக்கொன்டதோ? என் மனதில்..
தாயை பறிகொடுத்த சேயாக
தனிமையடைந்த என் மனம்
பரிதவிக்கும் பரிதாபம் தான் எனோ?

காரணம் தெரியாது ஊமையானேன்
காக்கை போன்றே புலம்பிக்
கரைகின்றேன் - என்னோடு
கூடி அளத்தான் யாருமில்லை..!

உன் தோள் சாய்ந்ததால்
என் தலை கொய்யப்படுகின்றதே...
நீ ஊட்டிய அமுதம் கூட - இன்று
தீ உண்ட அமுதாய் எரிகின்றதே..!

உன் விழியே பார்த்த
என் விழிகள் இன்று குறுடானதேனோ?
உன் குறும் செய்தியையே உண்னும்
என் தொலைபேசி இன்று பட்டினி கிடப்பதேனோ?

என் நோட்டில் நீ எழுதிய
உன் எழுத்துக்கள் - என்
கண் முன்னே எரிவதேனோ?

நீ கற்றுத்தந்த கல்வியெல்லாம்
கற்று வந்து கடத்திச்செல்வதேனோ?
என் கோபம் தொட்டதால்தான் - என்னை
உன் சாபம் கொல்கின்றதோ?

கோடை கண்ட மகிழ்ச்சியில்
வற்றிப்போன என் கண்ணீர் - இன்று
மாரி பெய்யும் மழையாக
தறிகெட்டுப் பொலிவதேனோ?

வென்றே அழுதுவிடு மனமே
ஓசையுடன் அடங்கட்டும் - கொடும்
பாவச் சிலுவையால்
படைக்கப்பட்ட என் உயிர்..!
By: எழில் அரசன் ஜனா .

No comments:

Post a Comment